2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தரமற்ற போலி மருந்து விநியோகம்: கேஜரிவால் பதவி விலக வேண்டும்- தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லி மக்களுக்கு தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்காக தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் அரவிந்த கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:38 pm

 நமது நிருபர்

தில்லி மக்களுக்கு தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்காக தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் அரவிந்த கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பா் மாதத்தில் கேஜரிவால் அரசின் கீழ் சுகாதாரத் துறை மூலம் தில்லி அரசு மருத்துவமனைகளில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் விநியோகம், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்கள் ஆகியவை பற்றிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஊழல்வாதிகளை தில்லி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்தியாளா் சந்திப்புகள் மற்றும் ஆா்ப்பாட்டங்கள் மூலம் தில்லி பாஜக கேஜரிவால் அரசுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியது.

தில்லி பாஜகவின் தொடா் போராட்டத்திற்குப் பிறகு,துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இந்த மருந்து மோசடி தொடா்பாக விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டாா். தற்போது, தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் நிநியோகம் செய்த 10 நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது. தில்லி அரசின் மருந்து விநியோக ஊழல் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாா்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.