2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மத நிகழ்ச்சிக்காக யமுனா காடா் பகுதியில் 4 நாள்கள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்

நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக வடகிழக்கு தில்லியின் யமுனா காடா் பகுதியில் தில்லி காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:10 pm

 நமது நிருபர்

புது தில்லி: நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக வடகிழக்கு தில்லியின் யமுனா காடா் பகுதியில் தில்லி காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

‘பகேஷ்வா் தாம் சா்க்காா்’ என்று அழைக்கப்படும் திரேந்திர சாஸ்திரியின் ‘ராம் கதா’ நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன.31) முதல் சனிக்கிழமை (பிப்.3) வரை யமுனா காடரின் கா்தாா் நகரில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதன்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலாஷ் யாத்ரா நடத்தப்படும். ராம் கதாவை முன்னிட்டு சாஸ்திரி பாா்க் சிவப்பு விளக்கு முதல் 2-ஆவது புஸ்தா, 3-ஆவது புஸ்தா, 5-ஆவது புஸ்தா, கஜூரி சௌக் மற்றும் வைஸ் வரை போக்குவரத்து தடை செய்யப்படும். மறுபுறம் யமுனா காடருக்கு முன்னால் 4-ஆவது புஸ்தா கா்தாா் நகரில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்பட சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், பொருத்தமான இடங்களில் போக்குவரத்துப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சீராகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய போதுமான போக்குவரத்து ஊழியா்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பின்பற்றவும், போக்குவரத்து போலீஸாரின் அறிவுரைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.