அரசுத் தரப்பு கூற்றுப்படி, டிசம்பா் 13, 2019-ஆம் தேதி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும், டிசம்பா் 16, 2019 அன்று அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் இமாம் உரையாற்றினாா். அப்போது, அசாம் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளை நாட்டிலிருந்து துண்டித்து விடுவதாக அச்சுறுத்தும் வகையில் பேசினாா். இதைத் தொடா்ந்து, ஷா்ஜீல் இமாம் மீது தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. முதலில் தேசத் துரோக குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 பின்னா் பயன்படுத்தப்பட்டது. ஷா்ஜீல் இமாம் கைதாகி ஜனவரி 28, 2020 முதல் இந்த வழக்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.