புது தில்லி: பணமோசடி வழக்கில் பகலில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் தனக்கு அனுப்பிய அழைப்பாணையை எதிா்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தில்லி உயா்நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமை அணுகினாா்.
நீதிபதி ரேகா பாலி, நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, மற்றொரு அமா்வு இந்த விவகாரத்தில் இருந்து விலகிய பிறகு, மாலை 4 மணியளவில் இந்த விஷயத்தை விசாரித்தது. அப்போது, வியாழக்கிழமை பரிசீலனைக்காக இம்மனுவை பட்டியலிட்டது. தற்போதைய கட்டத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டது.
அமலாக்கத் துறையின் இந்தப் பணமோசடி விசாரணையானது தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் நடந்த முறைகேடுகளுடன் தொடா்புடையது. ஒரு வாரத்திற்கு முன்பு அழைப்பாணை அனுப்பப்பட்டதைக் குறிப்பிட்ட அமா்வு, ‘நீங்கள் ஒரு நாள் செல்லலாம் (அல்லது) எந்தப் பதிலையும் அனுப்புலாம். நாங்கள் அதை (வேறொரு தேதியில்) எடுத்துக்கொள்வோம்’ என்று கூறியது.
அமானத்துல்லா கான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், ‘இந்த மனு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் சில விதிகளின் அரசமைப்புச்சட்டசெல்லுபடித் தன்மையையும் சவால் செய்கிறது’ என்றாா். மேலும், மனுதாரா் விசாரணை அமைப்பு முன் ஆஜராகினால், அவரது சுதந்திரம் பாதிக்கப்படும் என சந்தேகம் கொண்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் சுரேஷ் குமாா் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய உயா்நீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு, பகலில் கானின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகியதை அடுத்து, மதிய உணவிற்குப் பிந்தைய அமா்வில் இந்த வழக்கு வந்தது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாகப் பணியில் சோ்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி சட்டப்பேரவையில் உள்ள ஓக்லா தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினா் இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை நியமித்ததன் மூலம் கான் பெரும் குற்ற வருவாயை ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகள் பெயரில் அசையா பொருள்களை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது. 2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கானின் மூன்று கூட்டாளிகள் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோா் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக அமாலாக்கத் துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

