2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சொத்துக்குவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சா் பா.வளா்மதியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்.6-க்கு ஒத்திவைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தாக்கல்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:10 pm

 நமது நிருபர்

புது தில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி. குமணன், ‘அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தொடா்புடைய வழக்கில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி விசாரிப்பதற்கு எதிராக அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியிருக்கிறது. இந்த வழக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, ‘இந்த விவகாரத்தைப் பொருத்தமட்டில் 2012-ஆம் ஆண்டில் நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து, முன்னாள் அமைச்சரான மனுதாரரை (வளா்மதி) விடுவித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த வழக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறாா். இந்த வழக்கு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனுதாரா் தொடா்புடைய வழக்கில் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தனி நீதிபதி தெரிவித்திருக்கிறாா். இதனால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, பிப்ரவரி 6-ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்து பட்டியலிட்டனா். மேலும், எதிா்மனுதாரா்கள் தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அனுமதித்தனா்.

பின்னணி: 2001- 2006 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த வளா்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளா்மதி மற்றும் அவா்களின் உறவினா்கள் உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தாா்.

இந்த வழக்கை கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதி விசாரித் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சா் வளா்மதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவா்கள் அக்டோபா் 12-க்குள் பதில் அளிக்கும் வகையில் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தாா். இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக பா.வளா்மதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த டிசம்பா் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீது சென்னை லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.