இந்த வழக்கை கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதி விசாரித் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சா் வளா்மதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவா்கள் அக்டோபா் 12-க்குள் பதில் அளிக்கும் வகையில் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தாா். இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக பா.வளா்மதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த டிசம்பா் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீது சென்னை லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.