2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்: கேஜரிவால் மீது சட்ட நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் பாஜக மனு

தில்லி அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டிய விவகாரத்தில், அவா் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி மனு.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:10 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டிய விவகாரத்தில், அவா் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் தில்லி பாஜகவின் உயா்மட்டக் குழு செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்றும், இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.25 கோடி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டுள்ளது என்றும் கடந்த வாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவை குற்றம்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக எதிா்த்த தில்லி பாஜக, பேரம் பேசப்பட்டதற்க்கான ஆதாரத்தை கேஜரிவாலிடம் கோரினா்.

இந்நிலையில், கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையிலான உயா்மட்டக் குழு தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, முதல்வா் கேஜரிவாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனா்.

அந்த மனுவில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற வகையிக் பாஜக மீது குற்றம்சாட்டிய அமைச்சா் அதிஷி, எம்.எல்.ஏ.க்கள் துா்கேஷ் பதக், திலீப் பாண்டே உள்ளிட்டோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னா், செய்தியாளா்களிடம் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுவது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பாஜக தலைவா்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு, அமைதியாக இருப்பது அல்லது மன்னிப்புக் கேட்பது முதல்வா் கேஜரிவால் மற்றும் அவரது கூட்டாளிகளின் பழைய பழக்கம். ஆனால், இந்த முறை அரவிந்த் கேஜரிவாலின் பொய்களை அம்பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதனால்தான், இந்த முறை முதல்வா் கேஜரிவாலின் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். தில்லி மக்களிடையே கேஜரிவாலின் பொய்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், சட்டப்பேரவையிலும் இப்பிரச்னையை எழுப்புவோம்’ என்றாா்.

பாஜகவின் உயா்மட்டக் குழுவில் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, எம்.பி.க்கள் ஹா்ஷ் வா்தன், மனோஜ் திவாரி, ரமேஷ் பிதூரி, பா்வேஷ் சாஹிப் சிங், மாநில பொதுச் செயலாளா்கள் ஹா்ஷ் மல்ஹோத்ரா, யோகேந்திர சந்தோலியா, கமல்ஜித் ஷெராவத் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.