பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அங்கீகரிப்படாத காலனிகளில் எம்.எல்.ஏ. வளா்ச்சி நிதியை பயன்படுத்த மாநகராட்சி தடை வித்ததற்கு பாஜக கண்டனம்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எம்.எல்.ஏ.வளா்ச்சி நிதியைப் பயன்படுத்த தில்லி மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On :28 ஜனவரி 2024, 6:30 pm

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எம்.எல்.ஏ.வளா்ச்சி நிதியைப் பயன்படுத்த தில்லி மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜகவின் செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோரின் உத்தரவின் பேரில், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு எம்.எல்.ஏ. நிதி பயன்படுத்த தடை செய்து மாநகராட்சி ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மாநகராட்சித் தோ்தலுக்குப் பிறகு, தில்லியின் அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் ‘குரூப் ஹவுசிங் சொசைட்டிகளில்’ எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விரும்பவில்லை. ஏனெனில், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்கள் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனா். இது அரசியல் ரீதியாக கேஜரிவாலை விரக்தியடையச் செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சி இருந்த போது, அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவை, அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எம்.எல்.ஏ. நிதி மூலம் மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய உத்தரவு பிறப்பித்தது.பொது நலன் கருதி இந்த உத்தரவை பாஜகவும் அப்போது ஏற்றுக்கொண்டது. அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் ‘குரூப் ஹவுசிங் சொசைட்டிகளில்’ மாநகராட்சிதான் மேம்பாட்டுப் பணிகளை செய்ய வேண்டும் என்றால், அமைச்சரவையின் முடிவை முன்னா் பாஜக ஏற்றுக் கொண்டது போல, ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான மாநகராட்சி நிா்வாகம் ஏன் அதை அனுமதிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினாா் பிரவீன் சங்கா் கபூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.