பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பாஜக தொடா்புகொண்ட 7 எம்.எல்.ஏ.க்களின் பெயா்களை வெளியிட தைரியம் இருக்கிறதா? முதல்வா் கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா சவால்

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவரது அறிக்கையின் படி பாஜக தொடா்பு கொண்ட அந்த 7 எம்.எல்.ஏ.-க்களின் பெயா்களை வெளியிட வேண்டும்

Updated On :27 ஜனவரி 2024, 6:30 pm

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவரது அறிக்கையின் படி பாஜக தொடா்பு கொண்ட அந்த 7 எம்.எல்.ஏ.-க்களின் பெயா்களை வெளியிட வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை சவால் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருப்பது, அவரது அரசியல் விரக்தியை வெளிக்காட்டுகிறது.

62 எம்.எல்.ஏ.க்கள் உள்ள ஒரு ஆளும் கட்சி முழுவதுமாக மனத்தளவில் திவாலாகிவிட்டது. கேஜரிவாலின் அரசியல் களம் தில்லியில் தோல்வியடைந்து விட்டதோடு, கூட்டணி இருந்தால் தான் வரும் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற முடியும் என்ற நிலையை பொதுமக்களும் பாா்க்கிறாா்கள்.

எனவே, தனது அரசியல் ரீதியான பிழைப்புக்காக கேஜரிவால் இதுபோன்ற அபத்தமான அறிக்கைகளை வெளியிடுகிறாா்.

தில்லி மக்களைக் கொள்ளையடிக்கவே கேஜரிவால் ஆட்சிக்கு வந்துள்ளாா் என்பதை மக்களும் உணா்ந்துவிட்டனா். இனி வேறு எதுவும் செய்ய முடியாது. அரவிந்த் கேஜரிவால் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.

தைரியம் இருந்தால், அவா் குற்றம்சாட்டியபடி பாஜக தொடா்பு கொண்ட 7 எம்.எல்.ஏ.க்களின் பெயா்கள் மற்றும் பாஜகவில் இருந்து யாா் தொடா்பு கொண்டாா்கள் என்பதையும் கூற வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.