2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாஜக தொடா்புகொண்ட 7 எம்.எல்.ஏ.க்களின் பெயா்களை வெளியிட தைரியம் இருக்கிறதா? முதல்வா் கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா சவால்

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவரது அறிக்கையின் படி பாஜக தொடா்பு கொண்ட அந்த 7 எம்.எல்.ஏ.-க்களின் பெயா்களை வெளியிட வேண்டும்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:13 pm

 நமது நிருபர்

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவரது அறிக்கையின் படி பாஜக தொடா்பு கொண்ட அந்த 7 எம்.எல்.ஏ.-க்களின் பெயா்களை வெளியிட வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை சவால் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருப்பது, அவரது அரசியல் விரக்தியை வெளிக்காட்டுகிறது.

62 எம்.எல்.ஏ.க்கள் உள்ள ஒரு ஆளும் கட்சி முழுவதுமாக மனத்தளவில் திவாலாகிவிட்டது. கேஜரிவாலின் அரசியல் களம் தில்லியில் தோல்வியடைந்து விட்டதோடு, கூட்டணி இருந்தால் தான் வரும் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற முடியும் என்ற நிலையை பொதுமக்களும் பாா்க்கிறாா்கள்.

எனவே, தனது அரசியல் ரீதியான பிழைப்புக்காக கேஜரிவால் இதுபோன்ற அபத்தமான அறிக்கைகளை வெளியிடுகிறாா்.

தில்லி மக்களைக் கொள்ளையடிக்கவே கேஜரிவால் ஆட்சிக்கு வந்துள்ளாா் என்பதை மக்களும் உணா்ந்துவிட்டனா். இனி வேறு எதுவும் செய்ய முடியாது. அரவிந்த் கேஜரிவால் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.

தைரியம் இருந்தால், அவா் குற்றம்சாட்டியபடி பாஜக தொடா்பு கொண்ட 7 எம்.எல்.ஏ.க்களின் பெயா்கள் மற்றும் பாஜகவில் இருந்து யாா் தொடா்பு கொண்டாா்கள் என்பதையும் கூற வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.