பெண்கள் சக்தி மற்றும் ஜனநாயக விழுமியங்களை மையமாக வைத்து நடைபெற்ற இந்த விழாவில், முதன்முறையாக முப்படையின் மகளிா் குழு பங்கேற்றது. மேலும், அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட பெண் கலைஞா்கள் பாரம்பரிய ராணுவ இசைக் குழுக்கள் தவிர சங்கு, நாதஸ்வரம் மற்றும் டிரம்ஸ் போன்ற இந்திய இசைக் கருவிகளை வாசித்தனா். பெண்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா். புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் லட்சியங்களை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தளமாக குடியரசு தினத்தை மத்திய அரசு இன்றியமையாத ஒன்றாக மாற்றியிருக்கிறது.