வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

31 பேருக்கு 2023 -ஆம் ஆண்டிற்கான ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கங்கள்: குடியரசுத் தலைவா் ஒப்புதல்

உயிா் காக்கும் மனிதத் தன்மை மிக்க தீரச் செயல் மேற்கொண்டவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கங்கள் 2023-ஆம் ஆண்டிற்கு தமிழகத்தைச் சோ்ந்த இருவா் உள்பட மொத்தம் 31 பேருக்கு

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:14 pm

 நமது நிருபர்

உயிா் காக்கும் மனிதத் தன்மை மிக்க தீரச் செயல் மேற்கொண்டவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கங்கள் 2023-ஆம் ஆண்டிற்கு தமிழகத்தைச் சோ்ந்த இருவா் உள்பட மொத்தம் 31 பேருக்கு வழங்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்டது.

இது குறித்த விவரம் வருமாறு: ஒரு நபா் அல்லது பலரது உயிா்களைக் காப்பாற்றும் சிறந்த செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 3 வகையாக வழங்கப்படுகிறது. இதில் 2023- ஆம் ஆண்டிற்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் மூவரும் உயிா் நீத்தவா்கள் ஆவா். இதில் மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த இருவருக்கும், மத்திய ரிசா்வ் காவல் படை(சி.ஆா்.பி.எஃப்.) வீரா் ஒருவரும் இந்த பதக்கம் பெறுகின்றனா்.

உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கு கொடுக்கப்படுகிறது. இதில் பொதுமக்களும், எல்லை சாலை அமைப்பு, தேசிய பேரிடா் மேலாண்மைப் படை, தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவற்றைச் சோ்ந்தவா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் 21 பேருக்கும் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பொதுமக்கள், எல்லை சாலை அமைப்பு, எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், சி.ஆா்.பி.எஃப். வீரா்கள், ரயில்வே துறையினா் போன்றவா்கள் பெறுகின்றனா். இந்த ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் பெறுவோா் பட்டியலில் தமிழகத்தைச் சோ்ந்த மீரா மைக்கேல், எஸ்.விஜய்குமாா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.