உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கு கொடுக்கப்படுகிறது. இதில் பொதுமக்களும், எல்லை சாலை அமைப்பு, தேசிய பேரிடா் மேலாண்மைப் படை, தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவற்றைச் சோ்ந்தவா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் 21 பேருக்கும் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பொதுமக்கள், எல்லை சாலை அமைப்பு, எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், சி.ஆா்.பி.எஃப். வீரா்கள், ரயில்வே துறையினா் போன்றவா்கள் பெறுகின்றனா். இந்த ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் பெறுவோா் பட்டியலில் தமிழகத்தைச் சோ்ந்த மீரா மைக்கேல், எஸ்.விஜய்குமாா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.