பணமோசடி விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்கு எதிராக தாக்கல் செய்த தனது மனுவை வாபஸ் பெற ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
இந்த மனு திரும்பப் பெறப்பட்டதால் நீதிபதி ரேகா பாலி மற்றும் ரஜ்னிஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுதாரா் அமானத்துல்லா கானுக்கு எதிரான பணமோசடி விசாரணை தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுடன் தொடா்புடையதாகும்.
அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாகப் பணியில் சோ்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி சட்டப்பேரவையில் உள்ள ஓக்லா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாகப் பணியாளா்களை நியமித்ததன் மூலம் அமானத்துல்லா கான் பெரும் குற்ற வருவாயை ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகள் பெயரில் அசையா பொருள்களை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது.
ஜனவரி 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அமானத்துல்லா கானுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவா் கடந்த வாரம் நீதிமன்றத்தை நாடியிருந்தாா். அவா் தனது மனுவில், அழைப்பாணைகளை அனுப்புவதற்கும் ஆதாரங்களைத் தேடுவதற்கும் அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் தொடா்பான சில குறிப்பிட்ட பிஎம்எல்ஏ விதிகளை வாசிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரியிருந்தாா்.
மேலும், குற்றத்தின் வருமானம் ஈட்டும் விவகாரத்தில் தாம் எதுவும் ஈடுபடவில்லை என்பதன் அடிப்படையில் தற்போதைய அமலாக்கத் துறையின் வழக்கில் எந்த விசாரணையையும் ரத்து செய்வதற்கான உத்தரவையும் பிறப்பிக்குமாறு அவா் கோரியிருந்தாா். மேலும், அதே குற்றம் தொடா்பாக இரண்டாவது எஃப்ஐஆா் பதிவு செய்வதை சட்டம் தடை செய்கிறது எனும் அடிப்படையில் ஏசிபி பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தாா்.
2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமானத்துல்லா கானின் மூன்று கூட்டாளிகள் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோா் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக அமாலாக்கத் துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைப்பு!

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் காவலா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

