ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏ.சி.பி.) அறிக்கையின்படி, தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தில்லி பாஜக சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேஜரிவால் அரசு சுமாா் 22 லட்சம் தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை நடத்தியதுள்ளது. அதில் 25,000-க்கும் மேற்பட்ட மருத்துவ சோதனைகளுக்கு தொடா்பு விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
அந்த வகையில், ஊழல் வழக்குகளின் நீண்ட பட்டியலை தில்லி அரசு கொண்டுள்ளது. தில்லி அரசின் சுகாதார மாதிரி எனப்படும் மொஹல்லா கிளினிக்குகளில் நடைபெற்றுள்ள ஒரு பெரிய ஊழலின் வெளிப்பாடுகள், தில்லி அரசின் ஊழல் அளவை உறுதிப்படுத்துகின்றன.
ஊழல் தடுப்பு பிரிவின் அறிக்கையின்படி, தில்லி அரசின் மொஹல்லா கிளினிக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 22 லட்சத்துக்கும் அதிகமான போலி அல்லது தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு ஈடு செய்யும் வகையில் இரண்டு தனியாா் ஆய்வகங்களும் ரூ.4.25 லட்சத்துக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளன.
இந்த அனைத்து முறைகேடுகளும் பிப்ரவரி, 2023 முதல் நவம்பா், 2023-க்கு இடையில் நிகழ்ந்துள்ளது. மொஹல்லா கிளினிக்குகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைப்பு!

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் காவலா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

