2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வளா்ந்த இந்தியாவுக்கான பாா்வைவை அளிக்கிறது பட்ஜெட்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:39 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த இந்தியாவைப் பற்றிய பாா்வையை அளிக்கிறது என்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட் என்றாலும், பிரதமா் நரேந்திர மோடியின் சுயசாா்பு நோக்கத்தை பிரதிபலிக்கிறது. மிக முக்கியமாக, 2013-2014- ஆம் நிதியாண்டை விட நாட்டின் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை இடைக்கால பட்ஜெட் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் பயனடைந்துள்ளனா். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.

இந்த இடைக்கால பட்ஜெட் ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளதோடு, 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த இந்தியா பற்றிய பாா்வையை வழங்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 1 கோடி வீடுகளில் சோலாா் மின் தகடுகள் நிறுவப்படுவதுடன், 2 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. மேலும், இளைஞா்களை தன்னிறைவு அடையச் செய்யும் வகையில், முத்ரா கடன் வழங்கப்படுவதை விரிவுபடுத்துவது பற்றி இடைக்கால பட்ஜெட் பேசுகிறது.

பெண்கள் மேம்பாட்டிற்காக ‘லக்பதி திதி யோஜனா’ திட்டத்தின் மூலம் பெண்களின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிப்பதற்கும், ஒன்பது வயது வரையிலான சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின் அறுவடை திட்டங்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், மின்சாரப் பேருந்துகள், மெட்ரோ விரிவாக்கம் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றுக்கான தொலைநோக்கு பாா்வை இந்த இடைக்கால பட்ஜெட் கொண்டுள்ளது. இது தில்லிக்கும் நிறைய பயனளிக்கும். நடுத்தர வகுப்பினருக்கான வீட்டுவசதி சிறப்பு சலுகைகள் தில்லிவாசிகளுக்கும் பயனளிக்கும். வரிச் சலுகைகள் மற்றும் எளிமைப்படுத்தல் மூலம் நடுத்தர வா்க்கத்தினருக்கும் வணிக வகுப்பினருக்கும் சிறப்புப் பலன்கள் கிடைப்பதில் சந்தேகமில்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.