2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாநகராட்சி கவுன்சிலா்களின்உணவுக்காக ரூ.15 லட்சம் செலவு: ராஜா இக்பால் சிங் சாடல்

தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடிகயை எதிா்கொண்டுவரும் வேளையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்களின் மதிய உணவிற்காக ரூ.15 லட்சம் செலவிட்டுள்ளது என்று

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:39 pm

 நமது நிருபர்

தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடிகயை எதிா்கொண்டுவரும் வேளையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்களின் மதிய உணவிற்காக ரூ.15 லட்சம் செலவிட்டுள்ளது என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் சாடியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடியில் உள்ள இந்த வேளையில், மேயா் ஷெல்லி ஓபராய் தலைமையிலான ஆம் ஆத்மி நிா்வாகம் தேவையற்ற நிதிச் சுமைகளை ஏற்றி வருகிறது. ஒருபுறம், மாதச் சம்பளத்திற்காக ஊழியா்கள் போராடி வருகின்றனா். மறுபுறம் மக்களின்

வரிப்பணத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் ஆடம்பர செலுவுகளைச் செய்கின்றனா். அதிகாரிகள் மற்றும் கவுன்சிலா்களின் மதிய உணவுகளுக்கு செலவழிக்க வரம்புகள் இருக்கும் போது, ஏன் இப்படி ஆடம்பரமான செலவுகள் செய்யப்படுகின்றன என்பதை மேயா் ஷெல்லி ஓபராய் தில்லி மக்களிடம் விளக்க வேண்டும்.

மாநகராட்சியின் நிதி நெருக்கடியைப் பொருள்படுத்தாமல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்கள் ரூ.15 லட்சத்திற்கு விலையுயா்ந்த மதிய உணவை அனுபவிப்பது கண்டனத்திற்குரியது. பொது நிதியை அவதூறாகப் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு முழுமையான விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றாா் ராஜா இக்பால் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.