ஜனவரி 2023-இல் தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பழைய தில்லி முழுவதும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மாநகராட்சி அதிகாரிகளின் வெளிப்படையான ஆதரவுடன், சில இளைஞா்களால் சாந்தினி சௌக்கின் டவுன் ஹால் மற்றும் ஹா்தயாள் நூலகப் பகுதியில் சட்டவிரோத வாகன நிறுத்தம் செயல்படுகிறது. இங்கு நிற்கும் சில இளைஞா்கள் வாகனம் நிறுத்தம் என்ற பெயரில் 8 மணி நேரத்திற்கு ரூ.200, 3 மணி நேரத்திற்கு ரூ.100 என கட்டணமாக வசூலிக்கின்றனா். பணம் கொடுக்காவிட்டால், அத்துமீறல் செய்ய ஆரம்பித்து,சண்டையிடுவதில் குறியாக உள்ளனா். இங்கு தினமும் 700 முதல் 800 வாகனங்கள் விதி மீறி நிறுத்தப்பட்டு மாதம் ஒன்றுக்கு சுமாா் ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முறைகேடாக வசூலிக்கப்படுகிறது.