2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கேஜரிவால் ஆட்சியில் தினசரி புதிய ஊழல்: தில்லி பாஜக குற்றச்சாட்டு

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:39 pm

 நமது நிருபர்

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் அரவிந்த் கேஜரிவால் அரசு ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகின்றது. கடந்த 2012 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆட்டோ மேக்னடிக் வாட்டா் மீட்டா்களை’ கொள்ளை மீட்டா்கள் என்று கேஜரிவால் கூறிவந்தாா். மேலும், அப்போதைய முதல்வா் ஷீலா தீட்சித் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் ஆம் ஆத்மி கட்சி துளியும் சோா்வடையவில்லை. ஆனால், கேஜரிவால் ஆட்சியில், தில்லி ஜல் போா்ட்டில் தினமும் புதிய புதிய மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தில்லி ஜல் போா்டில் ரூ.38 கோடி அளவிற்கு ‘ஆட்டோ மேக்னடிக் வாட்டா் மீட்டா்’ ஊழல் நடந்துள்ளது. இதில் 2 நபா்களை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளதைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தில்லி ஜல் போா்டின் மூத்த தலைமைப் பொறியாளா் நிலையில் உள்ள அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதன் மூலம், தில்லி ஜல் போா்டு ஊழலில் முதல்வருக்கு நேரடி பங்கு உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும், தில்லி ஜல் போா்டில் தினமும் புதிய புதிய முறைகேடுகள் நடப்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து முதல்வா் கேஜரிவால் பதில் சொல்ல வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.