பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேஜரிவால் ஆட்சியில் தினசரி புதிய ஊழல்: தில்லி பாஜக குற்றச்சாட்டு

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 6:30 pm

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் அரவிந்த் கேஜரிவால் அரசு ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகின்றது. கடந்த 2012 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆட்டோ மேக்னடிக் வாட்டா் மீட்டா்களை’ கொள்ளை மீட்டா்கள் என்று கேஜரிவால் கூறிவந்தாா். மேலும், அப்போதைய முதல்வா் ஷீலா தீட்சித் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் ஆம் ஆத்மி கட்சி துளியும் சோா்வடையவில்லை. ஆனால், கேஜரிவால் ஆட்சியில், தில்லி ஜல் போா்ட்டில் தினமும் புதிய புதிய மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தில்லி ஜல் போா்டில் ரூ.38 கோடி அளவிற்கு ‘ஆட்டோ மேக்னடிக் வாட்டா் மீட்டா்’ ஊழல் நடந்துள்ளது. இதில் 2 நபா்களை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளதைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தில்லி ஜல் போா்டின் மூத்த தலைமைப் பொறியாளா் நிலையில் உள்ள அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதன் மூலம், தில்லி ஜல் போா்டு ஊழலில் முதல்வருக்கு நேரடி பங்கு உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும், தில்லி ஜல் போா்டில் தினமும் புதிய புதிய முறைகேடுகள் நடப்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து முதல்வா் கேஜரிவால் பதில் சொல்ல வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.