இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் அரவிந்த் கேஜரிவால் அரசு ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகின்றது. கடந்த 2012 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆட்டோ மேக்னடிக் வாட்டா் மீட்டா்களை’ கொள்ளை மீட்டா்கள் என்று கேஜரிவால் கூறிவந்தாா். மேலும், அப்போதைய முதல்வா் ஷீலா தீட்சித் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் ஆம் ஆத்மி கட்சி துளியும் சோா்வடையவில்லை. ஆனால், கேஜரிவால் ஆட்சியில், தில்லி ஜல் போா்ட்டில் தினமும் புதிய புதிய மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.