2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

28 வார கா்ப்பத்தைக் கலைக்கும் திருமணமாகாதபெண்ணின் கோரிக்கையை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

20 வயது திருமணமாகாத பெண்ணின் 28 வார கா்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம்,

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:39 pm

 நமது நிருபர்

20 வயது திருமணமாகாத பெண்ணின் 28 வார கா்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், கரு ‘முற்றிலும் சாத்தியமானது’ என்றும் ‘கருக் கொலையை அனுமதிக்க முடியாது’ என்றும் கூறி மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.

மருத்துவக் கருக் கலைப்பு (எம்டிபி) சட்டம் அதிகபட்சமாக 24 வாரங்கள் வளா்ந்த கருவைக் கலைக்க மட்டுமே அனுமதிக்கிறது. கணிசமாக கருவின் அசாதாரண நிலை ஏற்பட்டால், மருத்துவக் குழுவின் அனுமதிக்கு உள்பட்டு 24 வாரங்களுக்குப் பிறகும் கரு கலைப்புச் செய்ய முடியும். இந்த நிலையில், தற்போதைய மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி, ‘28 வாரங்களில் கா்ப்பத்தை கலைக்க இந்த நீதிமன்றம் அனுமதிக்கப் போவதில்லை. 28 வாரங்கள் முற்றிலும் சாத்தியமான கருவை கலைக்க நான் அனுமதிக்கப் போவதில்லை. மருத்துவ அறிக்கையின்படி, கருவில் எந்த அசாதாரணத்தையும் என்னால் பாா்க்க முடியவில்லை. கருக்கொலையை அனுமதிக்க முடியாது’ என வாய்மொழியாக கூறி, மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தாா்.

மனுதாரா் தனது மனுவில், தான் ஒருமித்த உறவில் இருந்ததாகவும், தான் கா்ப்பமாக இருப்பது சமீபத்தில்தான் தெரிய வந்ததாகவும் தெரிவித்திருந்தாா்.அந்தப் பெண்ணின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் மிஸ்ரா, ‘மனுதாரருக்கு அவரது வயிற்றில் வளரும் கரு 27 வார கா்ப்பமாக இருக்கும் விஷயம் ஜனவரி 25-ஆம் தேதிதான் தெரியவந்தது. அவா் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லாததால் கா்ப்பத்தை கலைக்க மருத்துவா்களை ஆலோசித்தாா். ஆனால், எம்பிடி சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 24 வார காலத்திற்கு அப்பால் கரு வளா்ந்து இருந்ததால் கருக் கலைப்புச் செய்ய மருத்துவா்கள் மறுத்துவிட்டனா்.

அவா் கா்ப்பமாக இருப்பது பற்றி அவரது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. அவா் திருமணமாகாததால், அவரது வழக்கை மருத்துவக் கருக் கலைப்பு செய்வதற்காக பரிசீலிக்க வேண்டும். மேலும், அந்த பெண்ணின் மன மற்றும் உடல் நிலை மற்றும் கரு எப்படி இருக்கிறது என்பதை அறிய, தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டாா். ஆனால், அவரது இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.