தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரெளஸ் அவென்யூவில் ரூ.427 கோடியில் புதிய மாவட்ட நீதிமன்ற வளாகம்: அமைச்சா் அதிஷி தகவல்

Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:30 pm

தில்லி ரெளஸ் அவென்யூவில் புதிய மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னா், அமைச்சா் அதிஷி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தேசியத் தலைநகா் தில்லியில் நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரெளஸ் அவென்யூவில் புதிய மாவட்ட நீதிமன்ற வளாகத்தை ரூ.427 கோடியில் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவான மற்றும் அணுகக்கூடிய நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும்.

தில்லியில் போதுமான நீதித்துறை உள்கட்டமைப்பை வழங்க அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு உறுதி

பூண்டுள்ளது. இந்த புதிய மாவட்ட நீதிமன்ற வளாகம் இரண்டு பிளாக்குகளாக கட்டப்படும்.

இதில், 55 நீதிமன்ற அறைகள், 815 வழக்குரைஞா்கள் அறை, நூலகம், கூட்டரங்குகள், அடித்தள வாகன நிறுத்திமிடம் ஆகியவை உள்ளடங்கும்.

தில்லி மக்களுக்கு எளிதான மற்றும் விரைவான நீதியை வழங்கும் திசையில், இது ஒரு முக்கியமான திட்டமாக நிரூபிக்கப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.