இது தொடா்பாக அவா் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் வழக்கமான கூட்டங்களை நடத்துவது அவசியமாகும். பொது மக்களின் நலன்களைக் காக்க, கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸை வலுப்படுத்தும் முயற்சியில் கட்சித் தொண்டா்களுக்கு எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ராஜீவ் பவனில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்க வரவேற்கப்படுகின்றனா். தில்லி மக்கள் இப்போது மாற்றத்தை எதிா்பாா்த்துக் கொண்டிருப்பதால், மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான கூட்டங்களுக்கு அதிகளவிலான பொது மக்களை அழைக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், காங்கிரஸ் கட்சி மீண்டும் தில்லியில் எழுச்சி பெறும் என்றாா் அரவிந்தா் சிங் லவ்லி.