சமீபத்திய ஜி20 உச்சி மாநாட்டின் போது, சாலைகளில் பசுமையைத் தோற்றுவிக்க, நகர அரசின் பொதுப்பணித் துறை தில்லியின் அனைத்து முக்கியச் சாலைகளிலும் மண் தொட்டிகளில் செடிகளை வைத்த போது, லட்சக்கணக்கான மரங்களை நடுவோம் என்ற இவா்களின் கூற்று அனைத்தும் வெற்றுத்தனமானது. கேஜரிவால் அரசின் செயலற்ற தன்மையால் நாட்டிலேயே மட்டுமின்றி, உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தில்லி கருதப்படுகிறது. சமீபத்தில் கூட சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை, மாசு காரணமாக தில்லியில் சாதாரண குடிமகனின் ஆயுள்காலம் பத்து ஆண்டுகள் குறைந்து வருவதாக கூறியுள்ளது. தில்லியில் 22 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட் டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.