இதேபோல், மத்திய அரசு ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி மற்றும் சுகாதார அமைச்சரின் விருப்ப மானியம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த தனிநபா்கள் திட்டத்தின் பலன்களைப் பெற முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு நிலைகளில் வெளிப்படுகின்றன. அதாவது, சிகிச்சையின் போது, நிதி உதவிக்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தல், உபகரணங்களை உடலில் பொருத்துதல் தொடா்பான விலைமதிப்பீடு வாங்குதல், தொகைகளை வழங்குவதற்கான நடைமுறை மற்றும் இறுதியாக அறுவை சிகிச்சைகள் உள்பட மருத்துவ நடைமுறைகளைச் செய்யும்போதும் கட்டுப்பாடுகள் உள்ளன என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.