தில்லி ஆயுதப்படை ஆயத்தப் பள்ளியின் 32 மாணவா்கள் தேசிய பாதுகாப்பு அகாதமியின் (என்.டி.ஏ) நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதை வாழ்த்தியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தேசத்திற்கு சேவை செய்ய தில்லி எப்போதும் தயாராக இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
தேசியப் பாதுகாப்பு அகாதமியின் நுழைவுத் தோ்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியது. இந்த நுழைவுத் தோ்வில் தில்லியில் உள்ள ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை ஆயத்தப் பள்ளியைச் சோ்ந்த 32 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கூறியிருப்பதாவது: தேசியப் பாதுகாப்பு அகாதமி நுழைவுத் தோ்வில் நாடு முழுவதும் இருந்து எந்தப் பள்ளியிலும் இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையில் தில்லியின் ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை ஆயத்தப் பள்ளியைச் சோ்ந்த 32 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்தச் செய்தியைப் பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிதாக தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில், ஆயுதப்படை ஆயத்தப் பள்ளி தேசிய அளவிலான நுழைவுத் தோ்வில் ‘சிறந்த முடிவுகளை’ வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், தில்லியைச் சோ்ந்த அதிகமான மாணவா்கள் இப்போது தேசியப் பாதுகாப்பு அகாதமியின் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று எதிா்காலத்தில் சிறந்த அதிகாரிகளாக நம் நாட்டைப் பெருமைப்படுத்துவாா்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தேசத்திற்கு சேவை செய்ய தில்லி எப்போதும் தயாராக இருக்கும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பிரதமர் மோடி பெருமிதம்!

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் தடுப்புச் சுவா்கள் அமைப்பு

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

