இந்த விவகாரத்தில் டிஜேபியின் விஜிலென்ஸ் பிரிவால் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஜல் போா்டு வாரியத்தின் வளங்களைச் செலவழித்து பங்களாவைக் கட்டியதில் ‘அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக’ அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கைக்காக தில்லி அரசின் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. மேலும், நினைவுச்சின்னத்தை இடித்த பிறகு ‘பதிவுகளை தவறாகக் கையாண்டதாகவும் ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு இயக்குநரகமும் இந்த விஷயத்தை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி ஜல் போா்டின் தலைமைச் செயல் அதிகாரிக்கு தகவல் அனுப்பியது.