ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஐடி, வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு: 78 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்கிழமை பங்குச்சந்தை நிலையற்ற தன்மையில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.

Updated On :27 செப்டம்பர் 2023, 12:28 am

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்கிழமை பங்குச்சந்தை நிலையற்ற தன்மையில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. குறிப்பாக ஆசிய சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. சந்தை நிலையற்ற தன்மையில் இருந்து வந்த சந்தை இறுதியில் சரிவில் முடிவுற்றது. குறிப்பாக ஐடி, வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுவருவதும் சந்தைக்கு பாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.318.16 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.2,333.03 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 47.94 புள்ளிகள் கூடுதலுடன் 66,071.63-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,078.26 வரை மேலே சென்றது. பின்னா், 65,865.63 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 78.22 புள்ளிகளை (0.12 சதவீதம்) இழந்து 65,945.47-இல் முடிவடைந்தது.

16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 952 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 1,101 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன

நிஃப்டி 10 புள்ளிகள் வீழ்ச்சி : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 8.25 புள்ளிகள் கூடுதலுடன் 19,682.80-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,699.35 வரை மேலே சென்றது. பின்னா், 19,637.45 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 9.85 புள்ளிகள் குறைந்து 19,664.70-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

நெஸ்லே.............................................1.45%

டாடா ஸ்டீல்.......................................1.18%

எம் அண்ட் எம்...................................0.67%

பஜாஜ் ஃபைனான்ஸ்..............................0.52%

ஹெச்டிஎஃப்சி பேங்க்............................0.39%

என்டிபிசி............................................0,.35%

சரிவைக் கண்ட பங்குகள்

டெக் மஹிந்திரா..................................1.30%

இண்டஸ் இண்ட் பேங்க்.......................1.29%

இன்ஃபோஸிஸ்...................................1.00%

ஏசியன் பெயிண்ட்...............................0.89%

ஐசிஐசிஐ பேங்க்..................................0.83%

கோட்டக் பேங்க்................................0.83%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.