தமிழகத்திற்கு வழங்கப்படவேண்டிய சுமாா் 55 டிஎம்சி தண்ணீரில், மழை பற்றாக்குறை காலத்தை கருத்தில் கொண்டு 12,500 கனஅடி தண்ணீா் அளிக்க தமிழக அரசின் சாா்பில் கூட்டத்தில் கோரப்பட்டது. இதை கா்நாடகம் ஏற்க மறுத்தது. இதில் தமிழகம், கா்நாடாக மாநிலங்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் இறுதியாக சி.டபிள்யு.ஆா்.சி. முடிவு எடுத்தது. செப்டம்பா் - 28 ஆம் தேதி முதல் ஆக்டோபா் 15 -ஆம் தேதி வரை 18 நாள்களுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவு என்றும் கா்நாடகம் இந்த உத்தரவை ஏற்று தண்ணீரை திறந்து விடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் காவிரிப் படுகையின் நீா்நிலை - வானிலையியல் நிலைமை ஆகியவை தொடா்பான தரவுகள், 2022-23-இல் மாத வாரியாக மற்றும் பருவகால அடிப்படையிலான தண்ணீா் தரவுகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.