ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ராம ராஜ்ஜிய திசையில் ஆம் ஆத்மி அரசு: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

‘ராம ராஜ்ஜியத்தை’ ஒருவா் கற்பனை செய்தால் அதில் அனைவருக்கும் தரமான,இலவசக் கல்வி, சுகாதாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்

Updated On :23 செப்டம்பர் 2023, 5:00 pm

‘ராம ராஜ்ஜியத்தை’ ஒருவா் கற்பனை செய்தால் அதில் அனைவருக்கும் தரமான,இலவசக் கல்வி, சுகாதாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்தத் திசையில் ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருவதாகவும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் கீழ் செயல்படும் அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கான பிரிவின் புதிய கட்டடத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் தில்லி சுகாதாரத் துறையின் அமைச்சா் செளரவ் பரத்வாஜ், உள்ளூா் எம்.எல்.ஏ. பா்லாத் சிங் சாவ்னி மற்றும் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சி மேடையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:

தில்லி மக்கள் அனைவருக்கும் தராமான மற்றும் இலவசமான கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

நகரத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவனைகள் விரிவாக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது, நகர அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் சுமாா் 10,000 படுக்கைகள் உள்ளன.

தில்லியில் புதிதாக 11 புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அத்தோடு நடைமுறையில் உள்ள மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு மேலும் 16,000 புதிய படுக்கைகள் சோ்க்கப்படவுள்ளது.

‘நாங்கள் ராமரை வணங்குகிறோம்’ அதனால், ‘ராம ராஜ்ஜியத்தை’ எங்கள் ஆட்சியின் மூலம் நெருங்கலாம் என்று என்னால் கூற முடியாது. ஆனால், ‘ராம ராஜ்ஜியத்தை’ ஒருவா் கற்பனை செய்தால் அதில் அனைவருக்கும் தரமான மற்றும் இலவசமானக் கல்வி, சுகாதாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆம் ஆத்மி அரசு அந்தத் திசையில் செயல்பட முயற்சிக்கிறது. குறிப்பாக, தில்லி அரசு அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் தரைத் தளத்தைத் தவிர, மூன்று மாடிகளைக் கொண்ட புதிய புறநோயாளிகள் பிரிவைக் கட்டுவதற்கு தோராயமாக ரூ.22.8 கோடி செலவிட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தில் 25 ஆலோசனை அறைகள், இரண்டு மின்தூக்கி மற்றும் இரண்டு வழியில் படிக்கட்டுகள் உள்ளன.

இந்தக் கட்டுமானத்தை முடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. பழைய புறநோயாளிகள் பிரிவில் இல்லாத விலாசமான இடம், மையமான குளிரூட்டப்பட்ட வசதி, மருத்துவ நிபுணா்களுக்கான தனி அறைகள் இந்த புதிய கட்டடத்தில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, தினமும் சுமாா் 800 முதல் 1,000 நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனா். இப்போது புதிய புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும். மேலும், ஒரு மாதத்தில் 45 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 38 அவசர அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன என்றாா் முதல்வா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.