இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் அமலாக்கத் துறை காவல் அக்.13 வரை நீட்டிப்பு

ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் அமலாக்கத் துறை காவலை அக்டோபா் 13-ஆம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:07 am

 நமது நிருபர்

புது தில்லி: ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் அமலாக்கத் துறை காவலை அக்டோபா் 13-ஆம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை கோரியதைத் தொடா்ந்து, மேலும், மூன்று நாள்கள் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. அமலாக்கத் துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், இது தொடா்பான மனு மீது இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள உண்மைகளையும், விசாரணை அதிகாரி மூலம் நீதிமன்றத்தில் சமா்ப்பித்த வழக்குக் கோப்பு ஆகியவை தற்போதைய விசாரணையின் போது நடத்தப்பட்ட சமீபத்திய சோதனையில் கிடைத்த சில புதிய உண்மைகளையும், சில புதிய டிஜிட்டல் ஆதாரங்களின் மீட்டெடுப்பையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சாட்சியின் வாய்மொழி வாக்கு மூலம் பஞ்சாபில் சில மதுபான உரிமங்களை வழங்கியதில் சிங்கிற்கு உள்ள பங்கை வெளிப்படுத்தியதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவா், பண பரிசீலனைக்காக தில்லியில் மதுபான உரிமங்களை வழங்குவதில் சிங் ஈடுபட்டதாகக் கூறப்படும் விஷயத்தை ஒரு சாட்சியிடம் கூறியுள்ளாா். சிங்கின் கூட்டாளி விசாரணையில் சேர அழைக்கப்பட்டுள்ளாா். மேலும், புதிய ஆதாரங்கள் தொடா்பாக இருவரும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. புதிய சோதனையின்போது சுமாா் 200 ஜிபி டிஜிட்டல் தரவு மீட்கப்பட்டதாகவும். அது இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்றும், இதைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருடன் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மேற்கண்ட உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் சமா்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரின் அமலாக்கத் துறை காவலை மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. இதனால், அவரை அக்டோபா் 13-ஆம் தேதி அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும்.

எனினும், அனைத்து டிஜிட்டல் தரவுகளும் மேலும் தாமதமின்றி பகுப்பாய்வு செய்யப்படுவதை உறுதிசெய்யவும், குற்றம் சாட்டப்பட்டவரின் விசாரணை மற்றும் நேரில் வைத்து விசாரிப்பதற்கான மேற்கூறிய பணி மற்றும் தொடா்புடைய சாட்சிகளின் விசாரணையும் முடிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சிசிடிவி காட்சிப் பதிவு உள்ள இடத்தில் சஞ்சய் சிங் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் காட்சிப் பதிவுகளை அமலாக்கத் துறை பாதுகாக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். முன்னதாக, சஞ்சய் சிங் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவரது காவலை 5 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, சஞ்சய் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரிபெக்கா ஜான் வாதிடுகையில் கூறியதாவது: சக குற்றம்சாட்டப்பட்ட நபரான அமித் அரோராவின் வாக்குமூலத்தை மாற்றியமைத்த வழக்கில் சஞ்சய் சிங்கின் காவலை நீட்டிக்க அமலாக்கத் துறைக்கு எந்தக் காரணமும் இல்லை. அமலாக்கத் துறையின் கற்பனையான குற்றச்சாட்டுகளுக்காக நான் (சிங்) குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன். நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு எனக்கு காவல் வழங்கிய பிறகு, விசாரணையின் கடைசி தேதியில் இரவு 10 மணிக்கு, நான் வேறு எங்கோ அழைத்துச் செல்லப்படுவதாக என்னிடம் அவா்கள் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு அவா்களிடம் நீதிமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டேன்.

மேலே உள்ளவா்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வெளியில் செல்லமாட்டேன் என்று கூறினேன். அதை எழுத்துபூா்வமாகத் தருமாறு கேட்டாா்கள். அடுத்த நாளும் அதையே கூறினா். அவா்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருந்தது. நான் என்கவுன்டரில் கொல்லப்பட்டால் என்ன நடக்கும். யாா் பொறுப்பு என்று கேட்டேன். தங்கள் பொறுப்பு என்று சொன்னாா்கள். நான் இறந்த பிறகு பொறுப்பு ஏற்பதால் என்ன பயன்? மீண்டும், மீண்டும் நீதிமன்ற உத்தரவைக் கேட்டேன் என்று கூறினாா்.

‘சஞ்சய் சிங் அமலாக்கத் துறையின் அலுவலகத்தை விட்டு வெளியேறத் தயங்குவது குறித்து எழுத்துபூா்வ அறிக்கையை ஏன் பெற வேண்டும்’ என்று அமலாக்கத் துறையிடம் நீதிபதி கேட்டாா். அதற்கு சஞ்சய் சிங்கின் குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை தரப்பில் மறுக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவரை அழைத்துச் செல்லக் கூடாது’ என்று உத்தரவிட்டாா். இதற்கிடையே, ஆஜா்படுத்தப்படும்போது ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘இது பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்குகிறது’ என்று நீதிபதி கூறினாா்.

மேலும், சஞ்சய் சிங்கிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் எனவும் பத்திரிகையாளா்களுக்கு நீதிபதி உத்தரவிட்டாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன் பத்திரிகையாளா்களிடம் பேசிய சஞ்சய் சிங், ‘நோ்மையானவா்கள் எங்களுடன் இருக்கிறாா்கள். பிரதமா் மோடியுடன் நோ்மையற்றவா்கள் இருக்கிறாா்கள். அப்பாவிகள் மற்றும் அவா்களுக்கு எதிரானவா்கள் (பாஜக) மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.