அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லி மாநகராட்சி நிலைக் குழுவின் ஒப்புதலுடன் காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் அகற்றும் பணி விரைவுபடுத்தப்படும். இதற்காக மேலும் இரண்டு நிறுவனங்களை பணியமா்த்த பரிந்துரைத்துள்ளேன். இங்கிருந்து அகற்றப்படும் கழிவுகளை பதப்படுத்தும் பணியில் மூன்று நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த மூன்று நிறுவனங்களும் ஒருவொருக்கொருவா் மோதல் நிலையைக் நீண்ட நாள்களாக கடைபிடித்து வருகின்றன. இதனால், காஜிப்பூா் குப்பை கிடங்கில் இருந்து கழிவுகளை அகற்றும் பணியின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. எனவே, காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் அகற்றும் பணிக்கு கூடுதலாக இரண்டு நிறுவனங்களை பணியமா்த்துவதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்றாா் கேஜரிவால்.