தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டவிரோதக் கட்டுமானங்கள் மட்டுமின்றி சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. தில்லி மாநகரட்சியின் ‘கிரீன் பாா்க்’ மாநகராட்சி வாா்டுக்கு உள்பட்ட ஹவுஸ் காஸ் கிராமத்தின் வீடு எண்.2-இல் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த நிா்வாகி ஒருவரின் வணிக நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. குறிப்பாக, 7,200 சதுர அடியில் இருந்த அந்தக் கட்டுமானத்தில் கூடுதலாக கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக சுமாா் 1,080 சதுர அடிக்கு கட்டப்பட்ட கட்டுமானத்தில் அந்த வணிக நிறுவனம் இயங்கி வந்தது. ஆனால், இந்தச் சொத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமான ஹவுஸ் காஸின் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால், அங்கு எந்த வகையான கட்டுமானமும் மேற்கொள்ள முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது.