பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சில்லறை விலையை கட்டுப்படுத்த எண்ம ஏல முறையில் 1.94 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, அரிசி விற்பனை

மத்திய அரசு தனது இருப்பில் வைத்திருந்த 1, 89,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5,000 மெட்ரிக் டன் அரிசி, எண்ம ஏல முறையில் 2,255 ஏலதாரா்களுக்கு உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:05 am

 நமது நிருபர்

மத்திய அரசு தனது இருப்பில் வைத்திருந்த 1, 89,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5,000 மெட்ரிக் டன் அரிசி, எண்ம ஏல முறையில் 2,255 ஏலதாரா்களுக்கு உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் (ஓஎம்எஸ்எஸ்-டி) கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் முலம் சில்லறை விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் விவரம் வருமாறு: அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்து, சந்தைத் தலையீட்டு முன்முயற்சியாக வாராந்திர எண்ம ஏல முறை நடந்து வருகிறது. அக்டோபா் 4-ஆம் தேதி 15 -ஆவது எண்ம ஏல முறையில் நாடு முழுக்க உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 481 கிடங்குகள் மூலம் 2.01 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 264 கிடங்குகள் மூலம் 4.87 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் ஏலத்தில் வைக்கப்பட்டது. கோதுமை, அரிசிக்கான எண்ம ஏலத்தில் 2,447 போ் பங்கேற்றனா்.

இந்த ஏலத்தில் மொத்தம் 1.89 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5,000 மெட்ரிக் டன் அரிசி 2,255 ஏலதாரா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கோதுமைக்கு (நியாயமான சராசரி தரம்) இருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 2,150-ஆக இருந்த நிலையில், சராசரி விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூ.2,185.05 -ஆக இருந்தது. அரிசியின் இருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.2,932.83- ஆக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் சராசரி விற்பனை விலை ரூ.2,932.91 ஆகவும் இருந்தது.

சில்லறை விலைக் குறைப்புக்கு இந்த எண்ம ஏலத்தில் அதிகபட்சமாக 10 முதல் 100 டன் கோதுமையும், 10 முதல் 1,000 டன் வரையில் அரிசியும் விற்பனையில் ஏலதாரா்கள் பெறுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் கையிருப்பு, பதுக்கலைத் தவிா்ப்பதற்காக, வணிகா்கள் கோதுமை விற்பனை வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனா். மேலும் சிறு, குறு சில்லறை வியாபாரிகள் பங்கு கொள்ளும் வகையில் உறுதி செய்யப்பட்டது.

தொடா்ந்து, கோதுமையை வாங்கிய ஏலதாரா்களின் மாவு ஆலைகளில் வழக்கமான சோதனைகள், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 1,229 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என மத்திய நுகா்வோ் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.