நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

அம்பத்தூர் எஸ்டேட் தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் 

தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் எனக்கோரி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:17 pm

 நமது நிருபர்

மிகவும் சீர்கெட்டு விபத்துக்களுக்கு உள்ளாகி வரும் சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் எனக்கோரி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சென்னை அம்பத்தூர் எஸ்டேட் டையொட்டியுள்ள சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக சென்னை அம்பத்தூர் எஸ்டேட் டின் 3-ஆவது மெயின் ரோடு தேசிய நெடுஞ்சாலையின் முக்கி யப் பகுதியாக உள்ளது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் கனரக வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. முக்கியமான இந்தச் சாலை கடுமையாகச் சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அம்பத்தூர் எஸ்டேட் சாலை மோட்டார் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தகுதியற்ற நிலையில் இருக் கிறது.

சாலை புனரமைப்புப் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லா மல் தேங்கிக் கிடப்பதால் போக் குவரத்துப் பிரச்னைக்குத் தீர்வு இல்லாத நிலையில் பலதரப்பு மக் களும் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதே சாலையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 700க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடை பெற்றுள்ளன. குறிப்பாக அம்பத் தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இது குறித்து பத்திரிகைகளில் வெளியான தரவுகளும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை தாம்பரம், போரூர் போன்ற இடங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை யையும் இணைக்கிறது.

இதனால், இந்த சாலைக்கு முன்னுரிமை அளித்து புதிய சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அமைச்சர் சேகர் பாபு வேண்டுகோள்: மேலும், இது குறித்து டி.ஆர். பாலு குறிப்பிடுகையில், 'அம்பத்தூர் சாலையின் அவல நிலை குறித்து ஏற்கெனவே பல முறை நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.

தற்போது அம்பத்தூர் பகுதி யில் உள்ள பல்வேறு நலச் சங்கங் களும் இந்தச் சாலை சீர் செய்யப்படாதது குறித்து கண்டனங்களை தெரிவித்து வருவதை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருந கரவளர்ச்சிக்குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு இந்தப் பகுதியின் (ஸ்ரீபெரும்புதூர்) மக்களவை உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் எடுத்துக் கூறிய தைக்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.