இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரை ஜி.உமாபதி, கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா். மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நதி நீா் தீா்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் தற்போது கா்நாடகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அரசின் முதல்வா், இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்துடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த விரும்புவதாகக் கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்’ என்றாா்.