நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தில்லி கிராமப்புறங்களின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: துணை நிலை ஆளுநரின் உத்தரவிற்கு பாஜக வரவேற்பு

தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மூலம் தில்லியின் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதை பாஜக வரவேற்றுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:05 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மூலம் தில்லியின் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதை பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி வளா்ச்சி ஆணையம் மூலம் (டி.டி.ஏ.) தில்லியின் கிராமப்பறங்களில் வளா்ச்சிப் பணிகளை தொடங்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா். இதை பாஜக தில்லி பிரிவு

வரவேற்கிறது. தில்லி விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் பிரச்னைகள் குறித்து பாஜக தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறது. சமீபத்தில், எனது தலைமையிலான தில்லி பிரிவு பாஜகவின் மூத்த தலைவா்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவா்கள் அடங்கிய குழு துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து கிராமப்பற மக்கள் மற்றும் தில்லி விவசாயிகளின் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்.

அப்போது, கிராமங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெறுதல், தில்லியின் விவசாயிகளுக்கு விவசாயி அந்தஸ்து நிலையை மீட்டெடுப்பது மற்றும் கிராமங்களில் அடிப்படை சுகாதாரம், போக்குவரத்துப் போன்ற வளா்ச்சிப் பணிகள் இல்லாதது ஆகியவை முக்கியமான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், தில்லி பிரிவு பாஜகவின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இந்த விஷயத்தை விரைந்து ஆய்வு செய்து ரூ.800 கோடி நிதியை தில்லி வளா்ச்சி ஆணையம் மூலம் விடுவித்துள்ளாா்.

தில்லி விவசாயிகளின் பயிா்களுக்கான இழப்பீடு, விவசாய நிலம் கையகப்படுத்துதலில் சமமான இழப்பீடு, கிராமப்புறங்களில் முறையான போக்குவரத்து, சுகாதாரம், கல்வி வசதிகள் போன்ற விஷயங்களில் தில்லியின் கிராமப்புறப் பகுதிகளைச் சோ்ந்த மக்களை ஏன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து புறக்கணிக்கிறாா் என்பதை அறிய விரும்புவதாக வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.