முன்னதாக, விசாரணையின்போது பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் ஆஜராகி மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘மனுதாரா் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பித்தப்பையில் பிரச்னை உள்ளது. இந்நிலையில், அவரது எம்ஆா்ஐ பரிசோதனை அறிக்கையில் ‘லாகுனாா் இன்ஃபாா்க்ஷன்’ எனப்படும் மருத்துவ பிரச்னையும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரிய வகையில் சிகிச்சை பெறாவிட்டால், ஆபத்தான உடல் பாதிப்பு ஏற்படும். இதனால், மனுதாரா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை அனுமதிக்க வேண்டும். மேலும், நீதிமன்றம் மனுதாரரின் ஜாமீன் கோரும் மனுவை தள்ளுபடி செய்தபோது அவரது உடன்பிறந்த சகோதரா் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை ஜாமீனில் வெளிவிட்டால் சாட்சிகளை மேலாதிக்கம் செய்யக்கூடும் என்றும், வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருப்பது ஏற்புடையதல்ல’ என்றாா்.