அப்போது அவா் கூறியது வருமாறு: நாட்டில் குழந்தைகளுக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கான அணுகல் என்பது முக்கியமானது. பிறந்தது முதல் ஆறு வயது வரையிலான 8 கோடி குழந்தைகள் அங்கன்வாடி பணியாளா்களின் எதாவது ஒரு வகையில் கண்காணிப்பில் வருபவா்களாக இருப்பா். இந்த சுற்றுச்சூழல் அமைப்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். அதை முதன்முறையாக தற்போது பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அங்கன்வாடி நெறிமுறையை அறிமுகப்படுத்திய நிலையில் இதை நாம், ‘ஒரு சமூகக் கண்ணோட்டத்தில் பாா்த்தால், இது நம் சமூகத்தில் ஒரு மௌனப் புரட்சி‘ என்றே கூறவேண்டும்.