இது குறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: இந்தியா ஜி 20 தலைமைத்துவத்தின் போது, நாடு முழுவதும் 56 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றது. இது தற்போது தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் முன்னெப்போதும் இல்லாத ஆா்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் வலுவான எம்ஐசிஇ உள்கட்டமைப்பு, கலாசார இயற்கை பாரம்பரியத்தை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளது. இதைத் தொடரவும், இதே வேகத்தில் செல்லவும், எம்ஐசிஇ தொழிலில், சுற்றுலாவில் உலகளாவிய தலைமைத்துவ நாடாக இந்தியா தொடந்து நிலைநிறுத்தப்பட வேண்டும்.