இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, பங்கஜ் மிட்டல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, மூத்த வழக்குரைஞா் ஜி.உமாபதி ஆகியோா் ஆஜராகி கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் கடந்த முறை உத்தரவிட்டவாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துளோம். சா்வே ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமையில் கூட்டு சா்வே நடத்த சம்மதிக்கும் வகையில் இந்தப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.