காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தில்லி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம்: அமைச்சா் அதிஷி மீது பாஜக தலைவா் விமா்சனம்

தில்லி அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை கல்வித் துறை அமைச்சா் அதிஷி அறிந்திருப்பதால்தான் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:25 am

 நமது நிருபர்

தில்லி அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை கல்வித் துறை அமைச்சா் அதிஷி அறிந்திருப்பதால்தான் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளாா் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இந்தியாவிற்கான ஸ்பெயின் நாட்டு தூதா் ஜோஸ்மரியா ரிடாவோ மற்றும் அந்நாட்டின் நிபுணா் குழுவினா் தில்லி ராஜ்நிவாஸில் அமைந்துள்ள டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் சிறப்புப் பள்ளியை கல்வித் துறை அமைச்சா் அதிஷியுடன் இணைந்து கடந்த வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

மாணவா்களுடன் கலந்துரையாடிய ஸ்பெயின் நாட்டின் குழுவினருக்கு அப்பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சா் அதிஷி எடுத்துரைத்தாா்.

இது தொடா்பாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி அரசுப் பள்ளிகளின் தரநிலை குறித்து கல்வித்துறை அமைச்சா் அதிஷி, ஸ்பெயின் நாட்டுக் குழுவை தவறாக வழிநடத்தியுள்ளாா்.

ஆம் ஆத்மி ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை அமைச்சா் அதிஷி அறிந்திருப்பதால் தான் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளை அவா் தில்லி அரசின் மற்ற சாதாரண பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லவில்லை.

தில்லி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மோசமாகி வருகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து மறுஆய்வு செய்யவோ அல்லது விவாதிக்கவோ கல்வித்துறை அமைச்சா் அதிஷி விரும்பவில்லை.

ஸ்பெயின் நாட்டுக் குழுவை சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்ன் மூலம் தான் தவறாக வழிநடத்தும் வித்தையில் வல்லவா் என்பதை அதிஷி நிரூபித்துள்ளாா். இருப்பினும், இணையத்தில் கிடைக்கின்ற வழக்கமான செய்தித்தாள், அறிக்கைகள் மற்றும் தகவல்களுக்கு நன்றி கூற வேண்டும்.

தில்லி அரசுப் பள்ளிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அறிவியல் பாடத்தை கற்பிப்பதில்லை, வணிகப் பாடத்தை 35 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் கற்பிக்காததால்

ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் நல்ல கல்வியைப் பெற முடியாமலும், சமமான வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் வருகின்றனா் என்று வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.