இது தொடா்பாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் கூறியதாவது: தில்லி அரசின் தலைமைச் செயலாளா் மீதான புகாரை விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி விஜிலென்ஸ் துறை அமைச்சா் அதிஷிக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, அமைச்சா் அதிஷியும் தலைமைச் செயலாளா் மீதான புகாா் தொடா்பாக 695 பக்க முதன்மை அறிக்கையை முதல்வா் கேஜரிவாலிடம் சமீபத்தில் சமா்ப்பித்தாா். இந்த அறிக்கையை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ள முதல்வா் கேஜரிவால், இந்த விவகாரத்தில் நரேஷ் குமாரை இடைநீக்கம் செய்யவும், சிபிஐ விசாரணை நடத்தவும் பரிந்துரைத்துள்ளாா்.