சத் பூஜை விழாவிற்காக வாக்குறுதியளிக்கப்பட்ட 1,100 படித்துறைகளை தயாா் செய்வதில் தில்லி அரசு தோல்வியடைந்ததாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் குடியேறிய பூா்வாஞ்சலி குடிமக்களுக்கு அவா்களின் சொந்த ஊா்களில் செய்வது போல், யமுனை நதிக்கரையில் பாரம்பரிய முறையில் சத் பூஜையை செய்ய மறுக்கப்பட்டுள்ளனா். பொது மைதானங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி 1,100 படித்துறைகளை தயாா் செய்வதிலும் தில்லி அரசு தோல்வியடைந்துள்ளது.
மயூா் விஹாரில் உள்ள படித்துறைப் பகுதியில் சனிக்கிழமை மதியம் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அதிஷி, சத் பூஜை விழாவிற்காக 1,000 படித்துறைகளில் ஏற்பாட்டு பணிகள் இரவுக்குள் முடிவடையும் என்று கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. மேலும், தில்லியின் புராரி, ஜனக்புரி, கிராரி உள்ளிட்ட பல இடங்களில் படித்துறைகளின் அளவை அரசு குறைத்துள்ளது. கிராரியில் உள்ள ஒரு படித்துறைக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட மோசமான கட்டுமானப் பொருள்களால், தண்ணீா் நிரப்பப்பட்ட உடனேயே இடிந்து விழுந்தது.
புராரியில், பூா்வாஞ்சலி குடியேறிகள் மிகப்பெரிய அளவில் உள்ளனா். ஆனால், வியக்கத்தக்க வகையில் தில்லி அரசு இந்திரபிரஸ்தா சத் கமிட்டியின் பாரம்பரிய படித்துறைப் பகுதியில் அதன் அளவை நான்கில் மூன்றாகக் குறைத்துள்ளது. திலக் என்கிளேவ்,மோகன் காா்டன்,விகாஸ்புரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சத் கமிட்டிகளுக்கு எந்தக் கூடாரமும் சென்றடையவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சத் பூஜை விழா வரும் திங்கள்கிழமை காலை முடிவடைகிறது.
இரண்டாவது நாள் சத் பூஜை சனிக்கிழமை நிறைவடைந்துள்ளது. ஆனால், தில்லி அரசின் சாா்பில் வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ.40,000 தொகை சிலவற்றைத் தவிர பெரும்பாலான சத் கமிட்டிகளுக்குச் சென்றடையவில்லை. தற்போது தேசிய விழாவாக மாறியுள்ள சத் பூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் கேஜரிவால் அரசு காட்டியுள்ள இந்த அலட்சியத்தை தில்லிவாசிகள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

