இத்திட்டத்தின் கீழ், யாத்ரீகா்களுக்கு குளிா்சாதன ரயில் பெட்டிகளுக்கான பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், சரியான நேரத்தில் உணவும், தங்குவதற்கு குளிா்சாதன அறைகள் கொண்ட ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. யாத்ரீகா்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தில்லி அரசின் குழுவும் மூத்த குடிமக்களுடன் பயணிக்கிறது. ராமேசுவரம், துவாரகாதீஷ், சோம்நாத், நாகேஷ்வா், ஜகந்நாத் புரி, உஜ்ஜயினி பாபா மஹாகல், ஷீரடி சாய்பாபா, திருப்பதி பாலாஜி, அயோத்தி, மாதா வைஷ்ணோ தேவி, புஷ்கா், ஃபதேபூா் சிக்ரி, அமிா்தசரஸ் பொற்கோயில், கா்தாா்பூா் சாஹிப், நாகை அன்னை வேளாங்கன்னி, மதுரா-பிருந்தாவனம், ஹரித்வாா் போன்ற இடங்களுக்கு மூத்த குடிமக்கள் பயணம் செய்ய தில்லி முதல்வா் தீா்த்தயாத்திரைத் திட்டம் உதவுகிறது.