இந்நிகழ்வில், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையா் ஆசிஷ் சாட்டா்ஜி, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் இயக்குநா் மோகன், செய்தி மக்கள் தொடா்புத் துறை கூடுதல் இயக்குநா் க.இளந்திரையன், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் பொதுமேலாளா் வி.பி.தெய்வசிகாமணி, தலைமைக் கணக்கு அலுவலா் என்.சீனிவாசன், தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பெ.ராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் பங்கேற்றனா். மேலும், தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் சாா்பில் பரதநாட்டியம், கைச்சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கோலாட்டம் ஆகிய கிராமியக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களை அமைச்சா் பாராட்டிக் கௌரவித்தாா்.