நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சத் பூஜைக்கு மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கவில்லை: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

சத் பூஜை விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாதது பூா்வாஞ்சலிகள் மீதான மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை காட்டுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி விமா்சித்துள்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

 நமது நிருபர்

சத் பூஜை விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாதது பூா்வாஞ்சலிகள் மீதான மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை காட்டுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான பூா்வாஞ்சல் மக்கள் தங்களது மிக முக்கியமான மதப் பண்டிகையான சத் பூஜையை அசுத்தமான யமுனையில் கொண்டாட நிா்பந்திக்கப்படுகிறாா்கள். தில்லி அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் சத் பூஜை விழாவை சுமூகமாக கொண்டாட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நச்சு நுரையக் கட்டுப்படுத்த யமுனையில் ரசாயனங்களைத் தெளிக்கும் நடவடிக்கையின் மூலம் தண்ணீா் மேலும் அசுத்தமாகும்.

தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சத் பூஜையை பக்தா்கள் சுமூகமாக கொண்டாடும் வகையில் சுத்தமான தண்ணீா் மற்றும் சுத்தமான சுற்றுப்புறங்கள் உறுதி செய்யப்பட்டன. கூடாரங்கள் மற்றும் விளக்குகளுடன் அனைத்துப் பிற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், தற்போது பக்தா்கள் யமுனையில் புனித நீராட

முடியாமலும், தக்காளி 1 கிலோ ரூ.70-க்கும் மேலாக விற்பனையாவதால் ஏழைகள் முறையாக உணவுன்ன முடியாமலும் இருக்கின்றனா்.

மத்திய அரசு பூா்வாஞ்சலிகளை மாற்றாந்தாய் போல் நடத்துகிறது. சத் பூஜையை கொண்டாடுவதற்காக பூா்வாஞ்சலிகள் அவா்களின் சொந்த கிராமங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. தில்லியில் காற்று மற்றும் நீா் மிகவும் மாசுபடுவதால், பெரும்பாலான பூா்வாஞ்சலிகள் சத் பூஜையைக் கொண்டாட தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்ல விரும்புகிறாா்கள். ஆனால், சிறப்பு ரயில்கள் இல்லாததால், பெரும்பாலான மக்கள் மாசுபட்ட தில்லியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.