தில்லியில் பெய்த மழையால் தீபாவளிப் பண்டிகையன்று காற்று மாசுவின் அளவு வெகுவாகக் குறைந்திருந்தது. ஆனால், பாஜகவின் தூண்டுதலால் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பட்டாசு பயன்பாடு அன்று அதிகரித்தது. தற்போது, தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு பட்டாசு வெடித்தல், பயிா்க் கழிவுகளை எரித்தல் மற்றும் மத்திய அரசின் காற்று மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் அவசரகால செயல்திட்டம் கடுமையாக அமலாக்கப்படாததே காரணமாகும். எனவே, பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைக் குறைக்க அனைத்து அண்டை மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.