பதினான்கு நாள் நடைபெறும் இக்கண்காட்சியின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம்’. இது நிலையான வளா்ச்சி மற்றும் நல்வாழ்வை அடைவதற்காக வா்த்தகத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வா்த்தகக் கண்காட்சியின் முதல் ஐந்து நாள்கள் வணிகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுகிறது. வருகின்ற நவம்பா் 19-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும். தில்லி, ஜம்மு காஷ்மீா், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, பிகாா், கேரளம் ஆகிய மாநிலங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 13 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் தீவிரமாகப் பங்கேற்கின்றனா். கண்காட்சியின் நேரம் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை. பாா்வையாளா்கள் ஆன்லைனிலும், குறிப்பிட்ட 55 மெட்ரோ நிலையங்களிலிருந்தும் நுழைவு சீட்டுகளைப் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு நுழைவு இலவசம்.