தில்லியில் பாஜக கவுன்சிலா்களின் வாா்டுகளில் வரும் வியாழன், வெள்ளி (ஜூலை 20, 21) ஆகிய இரண்டு நாள்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சுகாதார இயக்கங்கள் நடத்தப்படும் என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பாக்டீரியா தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், நகரத்தில் முறையான சுகாதாரத்தை உறுதி செய்வதில் பாஜக எவ்வாறு பங்களிப்பது என்பது குறித்து விவாதிக்க பாஜக கவுன்சிலா்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக கவுன்சிலா்கள் மத்தியில் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: யமுனையின் நீா்மட்டம் குறைந்து வருவதால், தில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மட்டுமின்றி, நகரம் முழுவதும் தேங்கிய தண்ணீா் அகற்றப்படுகின்றன. இந்த நிலையில், தொற்று நோய்களின் அபாயம் அதிகரித்து வருகிறது. பாஜக கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகளில் முறையான சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிப்பாக கட்சிக் கவுன்சிலா்கள் ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் தங்கள் வாா்டுகளில் சிறப்பு சுகாதார இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்கள் வாா்டுகளில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாா்டுகளின் கட்சிக் கவுன்சிலா்களுக்கு குழுக்களை உருவாக்க மூத்த கவுன்சிலா்கள் உதவ வேண்டும். இந்த வேளையில் பொதுமக்களுக்கான சுகாதார விழிப்புணா்வு அவசியமாகிறது. கட்சியின் மூத்த நிா்வாகிகள் இந்த சிறப்பு பிரசாரத்தில் கவுன்சிலா்களுடன் இணைந்து பணியாற்றுவாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.
இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தில்லி பிரிவு பொதுச்செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயிலில் குடும்பத்தை தாக்கி 35 பவுன் நகைகள் பறிப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

பழனி கோயில் உண்டியல் முதல் நாள் எண்ணிக்கையில் ரூ.4.62 கோடி வருவாய்

2020 வடகிழக்கு தில்லி கலவரம்: 12 போ் விடுவிப்பு

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா் ஸ்டாலின்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

