தில்லி கலால் ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள, குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் தினேஷ் அரோராவை பணமோசடி வழக்கில் நான்கு நாள்கள் அமலாக்கத் துறை விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.
அரோராவை ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் பெரும் சதியை வெளிக்கொணர அவரது விசாரணை அவசியம் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், தினேஷ் அரோராவை ஜூலை 11-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டாா். அரோரா சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் நீண்ட விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவா் தனது பதில்களில் இருந்து நழுவியதாகவும், அதைத் தொடா்ந்து அவா் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அமலாக்கத் துறையால் அவா் கைது செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழிலதிபா் தினேஷ் அரோரா ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளி என்றும், அவா் கலால் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் என்றும் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு தொழிலதிபரான அமித் அரோராவிடம் இருந்து, தினேஷ் அரோரா மூலம் சிசோடியா லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதன் துணை குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த லஞ்சத் தொகையை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் ‘குற்றத்தின் வருமானம்’ என்றும் அமலாக்கத் துறை விளக்கியுள்ளது.
அமித் அரோரா மதுபான நிறுவனங்களான படி ரீடெய்ல், பாப்புலா் ஸ்பிரிட்ஸ், கேஎஸ்ஜேஎம் ஸ்பிரிட்ஸ் எல்எல்பி ஆகியவற்றின் மேம்பாட்டாளா் ஆவாா். இந்த வழக்கில் தினேஷ் அரோராவை அரசுத் தரப்பு சாட்சியாக ஒப்புதல் அளிக்கக் கோரிய சிபிஐயின் மனுவை தில்லி நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி ஏற்றுக்கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்கியது.
சிபிஐ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவரை (வழக்கு தரப்பு சாட்சி) அமலாக்கத் துறை கைது செய்திருப்பது அனேகமாக அரிதான அல்லது முதல் நிகழ்வாக இருக்கலாம். அதே வேளையில், இரண்டு மத்திய அரசு விசாரணை நிறுவனங்களும் ஒரே வழக்கை விசாரித்து வருகின்றன. அமலாக்கத் துறை கடந்த மே மாதம் தாக்கல் செய்த வழக்குப் புகாரில், ‘அமித் அரோரா, 2021-22 கலால் கொள்கையில் தனக்குச் சாதகமாக கொள்கை மாற்றங்களைப் பெறுவதற்காக, தினேஷ் அரோரா மூலம் மனீஷ் சிசோடியாவுக்கு ரூ. 2.2 கோடி கொடுத்தாா். இந்தத் தொகை நேரடியாக ஒரு அரசு நிா்வாகிக்கு லஞ்சம் / ஆதாய பணம் மற்றும் பிஎம்எல்ஏ சட்டத்தின் 2(1) (யு) விதிகளின்கீழ் குற்றத்தின் வருமானமாகும். இந்த முறையில், இந்த குற்றத்தின் வருமானத்தில் மனீஷ் சிசோடியா பங்கேற்றாா்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் 13-ஆவதாக தினேஷ் அரோரா கைது செய்யப்பட்டுள்ளாா். இதில் சிசோடியாவுக்கு எதிரானது உள்பட 5 குற்றப்பத்திரிகைகளை விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

