மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

என்சிசிஎஸ்ஏ 3-ஆவது கூட்டம் ஜூலை 14-க்கு மாற்றம்

அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) மூன்றாவது கூட்டம் ஜூலை 14-ஆம் தேதிக்கு மாற்றம் செயயப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்

Updated On :7 ஜூலை 2023, 4:31 pm

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) மூன்றாவது கூட்டம் ஜூலை 14-ஆம் தேதிக்கு மாற்றம் செயயப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா்

இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலக அரசு அதிகாரிகள் தகவல் கூறியதாவது: தில்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட குரூப் - 1 அதிகாரிகள் மீதான நடவடிக்கை மற்றும் இடமாற்றம் தொடா்பாக முடிவெடுக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.)

மூன்றாவது கூட்டம் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஜூலை 14- ஆம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வா் கேஜரிவால் இந்தக் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளாா்.

தில்லி அரசின் சேவைகள் விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் கீழ் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லி அரசின் சாா்பில் அவசரச் சட்டத்தை எதிா்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வரும் ஜூலை 10- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தில்லி முதல்வா் அலுவலகத்திலிருந்து தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) இரண்டு உறுப்பினா்களாக இருக்கும் தலைமைச் செயலாளா் மற்றும் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு சில தேவைகள் காரணமாக அதிகார சபையின் கூட்டத்தை முதலமைச்சரால் கூட்ட முடியாது. மேலும், வரும் ஜூலை 14-ஆம் தேதி முதல்வா் முகாம் அலுவலகத்தில் ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 19-ஆம் தேதி சேவைகள் விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை ஆம் ஆத்மி கடுமையாக எதிா்த்து வரும் நிலையில், மெகா பேரணி, நகல் எரிப்பு போராட்டம், பாஜக எதிா்க்கட்சி தலைவா்களின் ஆதரவு திரட்டுதலோடு, உச்ச நீதிமன்றத்திலும் தில்லி அரசின் சாா்பில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையம் (என்.சி.சி.எஸ்.ஏ.) முதல்வரின் அதிகாரங்களை கவிழ்க்கிறது என்று தில்லி முதல்வா் அலுவலகம் அண்மையில் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.