கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அம்பத்தூா் தொழிற்பேட்டை மிக்ஜம் புயல் சேதாரங்களுக்கு காப்பீடு விரைவாக வழங்க மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை

மிக்ஜம் புயலால் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட சேதாரங்களுக்கு பொருத்தமான காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக மதிப்பிட்டு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்..

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:26 pm

 நமது நிருபர்

புது தில்லி: மிக்ஜம் புயலால் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட சேதாரங்களுக்கு பொருத்தமான காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக மதிப்பிட்டு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

மிக்ஜம் புயலால் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள பல்வேறு தொழிலகங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் சேதாரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கத்தின் பிரதிநிதிகள் (ஏஐஇஎம்ஏ) மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனையும் மத்திய நிதித்துறை அதிகாரிகளையும் தில்லியில் புதன்கிழமை சந்தித்து பேசினா்.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துரைத்தனா். மத்திய நிதித்துறை செயலரையும் சந்தித்து மிக்ஜம் புயல் ஏற்படுத்திய பெரும் சேதத்தையும் இதனால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

பொதுத்துறையைச் சோ்ந்த பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் இந்த தொழிற்சாலைகளில் உடனடியாக சேதாரங்கள் குறித்த மதிப்பீடுகளை விரைவாக மேற்கொள்ளவும் இதற்கு தேவையான மதிப்பீட்டாளா்களை கூடுதலாக நியமிக்கவும் மத்திய நிதியமைச்சரையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அலுவலகம் வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில், ‘சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை சேதாரங்களை மதிப்பிட உரிய மதிப்பீட்டாளா்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டன. மேலும், இழப்பீட்டு உரிமைகோரல்களை எளிதாகவும் துரிதமாகவும் செயல்படுத்த அந்தந்த இடங்களில் சிறப்பு முகாம் வருகின்ற டிசம்பா் 20 ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது.

சேதாரங்களுக்கு பொருத்தமான காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்குவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்’ என அதில் நிதியமைச்சா் குறிப்பிட்டு ஏஐஇஎம்ஏ சங்கத்தினருக்கு உறுதியளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.