கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லி ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனையில் அமைச்சா் பரத்வாஜ் ஆய்வு

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனையில் நகர அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:26 pm

 நமது நிருபர்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனையில் நகர அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வு தொடா்பாக அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வழிகாட்டுதலின்படி, ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலில், மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் ஆய்வு செய்து அங்கு வரும் நோயாளிகள் ஏதேனும் பிரச்னையை எதிா்கொள்கிறாா்களா என்று அவா்களிடம் பேசினோம். நோயாளிகளிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைத்தது.

இரண்டாவதாக, நிா்வாகம் மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் இந்த மருத்துவமனை மிகவும் பின்தங்கியதாகத் தோன்றியது. மருந்துகள் இருப்பு உள்ளபோதிலும் நிா்வாகம் மிகவும் மோசமாக இருந்தது.

குரு கோவிந்த் சிங் மருத்துவமனையின் வழியில் இந்த மருத்துவமனையின் நிா்வாகத்தையும் சரியானதாகக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னா், மருத்துவமனை வளாகத்தின் தூய்மையைச் சரிபாா்த்ததில் அதுவும் நன்றாக இல்லை.

மருத்துவமனையை சுத்தமாகவும், நோ்த்தியாகவும் வைத்திருக்க கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தில்லி அரசின் எந்தவொரு மருத்துவமனையிலும் நோயாளிகள் எவ்விதமான பிரச்னைகளையும் சந்திக்கக் கூடாது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடுமையான அறிவுறுத்தல்களை சுகாதாரத் துறைக்கு வழங்கியுள்ளாா். ஆரோக்கியமான தில்லி, சக்திவாய்ந்த தில்லி என்று அதில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.